Tuesday, February 22, 2011

உட்கார்ந்திருக்கின்றார் அரசவையில்

தமிழிலே பொறியியலைப் படிக்கின்றானாம்
தர மாட்டோம் வங்கியிலே கடன் என்கின்றார்
அமிழ்தினிய தமிழர் தம் நாட்டில் வாழும்
அதிகாரக் கூட்டத்தார் என்ன செய்ய
தமிழர்கள் தான் அவரும் ஆனால் சொல்லுகின்றார்
தமிழ் நாட்டில் உயிரோடும் வாழுகின்றார்
உமிழுகின்ற பொய்யாலே உயிர் வாழ்கின்றார்
உட்கார்ந்திருக் கின்றார் அரசவையில்

1 மறுமொழிகள்:

said...

செருப்பாலே அடித்தாலும் திருந்தார் இந்தத்
திருடர்களின் இரண்டகமும் ஓயா தையா!
கருத்தாக இருப்பதுபோல் கடமை ஆற்றிக்
கனித்தமிழை அழிப்பதிலே மகிழ்ச்சி கொள்வார்
பொருப்பாக இருந்தேநாம் புலையர் மாளப்
பொருந்தியதை செய்துதமிழ் காக்க வேண்டும்
வருங்காலம் தமிழ்க்கல்வி கற்போ ருக்கே
வழங்கிடுவோம் பணியென்போன் ஆள வேண்டும்!