Sunday, February 20, 2011

பரமஹம்சர் பிறந்த நாள்

மனையாளைத் தேவியென வணங்கி நின்று
மதங்களையேச் சரியாக உணர்ந்து வென்று
அனைவருக்கும் நல் வழிகள் காட்டி நின்று
ஆண்டவனை உணருதற்குக் கதைகள் சொல்லி
புனைகின்ற வேடமல்ல மனம் தான் நம்மைப்
புதிதாக்கும் இறைவனையே உணரச் செய்யும் என
தனை நமக்காய்த் தந்த பரம உறம்சரவர்
தான் வந்து தாய் மண்ணில் பிறந்த நன்நாள்

2 மறுமொழிகள்:

said...

கவிதையில் தகவல் ... வாழ்த்துக்கள்

said...

அண்ணா!
இந்தப் புனிதர் தன் ஞானகுரு என அவர் பெயரையும் சேர்த்து புதுப்பெயர் சூட்டி; துறவையே அவமானப்படுத்திய நித்தியானந்தன் கூறுகிறாரே; இதைக் கேட்பாரில்லையா?