Friday, June 4, 2010

இனிய தம்பி நாஞ்சில் நாடன்

அண்ணாச்சி என அழைக்கும் குரலினிலே
அன்பு நேர்மை உண்மை யெல்லாம் நிறைந்திருக்கும்
கண்ணீரால் நான் கரையும் காலங்களில்
கனிவு மொழி மனமதனை தேற்றி நிற்கும்
பண்பாலே எனை வென்று எந்தன் அன்பைப்
பத்திரமாய் சித்திரமாய் காக்கும் தம்பி
கண் போன்றார் என் தம்பி நாஞ்சில் நாடன்
கடவுள் எனக்கென்று தந்த இனிய தம்பி

0 மறுமொழிகள்: