Tuesday, June 29, 2010

பாவேந்தர் நினைந்தாரா

யாருக்கும் வெட்கமில்லை என்று அன்றே
இழிந்தார்க்கு ஒரு சொல்லைத் தந்தார் தாசன்
ஊருக்கே வெட்கமின்றி ஒழியும் என்று
ஒரு நாளும் சொல்லவில்லை பாவின் வேந்தர்
பேருக்கே அவரை யெல்லாம் சொல்லுகின்றார்
பெருமை செய்யவில்லை அவர்க் கின்று இங்கே
யார் கேட்கப் போகின்றார் வாய் திறந்து
எல்லோரும் பிழைக்கின்றார் அஞ்சி அஞ்சி

0 மறுமொழிகள்: