Saturday, June 26, 2010

கொடுமைகளை

எழுத்தாலே தமிழுக்குச் சேவை செய்த
எத்தனையோ நல்லறிஞர் நாட்டில் உண்டு
செழித்த அந்தத் தமிழறிஞர் தன்னையெல்லாம்
சிறப்பிக்க விரும்பாமல் அடிவருடிப்
பிழைப்பாரைப் பேணுகின்றார் அவரும் தன்னைப்
பேரறிஞர் என்று எண்ணி ஆடுகின்றார்
பொறுக்கின்றாள் தமிழ் அன்னை என்ன செய்ய
பொதிகை மலைக் குளிராகக் கொடுமைகளை

2 மறுமொழிகள்:

said...

மிகச்சரி அய்யா!

நடப்பை அப்படியே
அப்பட்டமாகச் சொல்லிவிட்டீர்கள்!

said...

உண்மை...உண்மை...உண்மை...