Sunday, June 20, 2010

நினைந்து போற்ற

மரபாலே மயக்கி நின்ற மாக் கவிஞன்
மனிதர் வாழ்வைச் சொல்வதிலே வென்ற மேதை
திரை உலகா அதிலேயும் வெல்வதற்கு
தேடி இன்று பார்த்தாலும் யாரும் இல்லை
வரவானான் தமிழுக்கு அன்னை அவள்
வரமானாள் அவனுக்கு வென்றான் வென்றான்
தரமானான் கண்ணாதாசப் பெருங் கவிஞன்
தான் பிறந்த நாளின்று நினைந்து போற்ற

0 மறுமொழிகள்: