Sunday, June 20, 2010

அருள்க அய்யா

கொல்லத்தான் போகின்றாய் என்ற போதும்
குளிர் பார்வை தனில் என்னை ஆட்படுத்தி
நல்லவனாய் வாழ வைத்தல் உந்தன் கடன்
நாயகனை உனைப் போற்றி நிற்கின்றேன் நான்
வெல்வதற்குத் தமிழ் தந்த தாயுணர்வே
வேண்டு மட்டும் உனைப் பாடி நிற்பதற்கு
சொல் அனைத்தும் தர வேண்டும் எந்தனுள்ளச்
சோதி மணிப் பேரருளே அருள்க அய்யா

0 மறுமொழிகள்: