Wednesday, April 30, 2008

பழம் பாடல் புதுக்கவிதை பரணி, நளவெண்பா

     ஒரு  உண்ர்வே  இரு  புலவர்  உள்ளம்  தன்னில்
          உருவாகும்  என்பதற்கு  உவமையாக
     தருகின்றேன்  இரு  செய்யுள்  உங்களுக்கு
          தமிழன்னை  கொடைகளினால்  உளம் ம்கிழ்வீர்



     இல்லாத  இடை  கொண்ட  பெணணொருத்தி
          இரு மார்பைத் தாங்கி  மெல்ல  நடக்கின்றாளாம
     பொல்லாத  மார்பதனின்  சுமைகள்  தன்னால்
           பொறுக்காமல்  இடையதுவும் ஒடியும் என்றே
     நில்லாமல்  ஒலி  எழுப்ப  என்றே  அந்த
          நெடுங் கண்ணாள்  சிலம்பிரண்டும சத்தமிட்டு
     எல்லோரும்  வாருங்கள்  இனிய பெண்ணின்
          இடை முறியும்  முன்னாலே  காக்க என்று

     குய்யோ  முறையோ  என்று  கூச்சலிட்டுக்
          கூப்பிடுமாம்  ஊரையெல்லாம்  உறவையெல்லாம்
     அய்யோ  இதைப் போன்ற  அழகுச் செய்தி
          அளிப்பதுவோ  இரு புலவர்  நமக்கு அய்யா
     மெய்யாக  வெண்பாவிற்  கொருவரென்று
          மேன்மை  கொண்ட புகழேநதிபபுல்வரோடு
     பொய்யாத  செயங்கொண்டான்  பரணியிலே
          புகலுகின்றான்  இச் செய்தி  காண்போம் வாரீர்

                              நளவெண்பா

     மோட்டிளங்  கொங்கை  முடியச் சுமந்தேற
     மாட்டாது  இடையென்று  வாய்  விட்டு  -  நாள்த் தேன்
     அலம்புவார்  கோதை  அடியிணையில்  வீழ்ந்து
     புலம்புமாம்  நூபுரங்க்ள்  பூண்டு

                          கலிங்கத்துப் பரணி

     உபய  தனமிசையில்  ஒடியும்  இடை ந்டையை
     ஒழியும் ஒழியும்  என  ஒண்சிலம்பு  
     அபயம்  அபயம்  என  அலற  நடை பயிலும
     அரிவை  மீர்  கடைகள்  திறமினோ்


     

        

படித்த வழி நடக்க வேண்டும்

     பதவியிலே  இருக்கின்ற  படித்தவர்கள்
          படித்த வழி  நடப்பதுவே நிலை  உயர்த்தும்
     உதவுகி்ன்றார்   உங்களுக்கு  ஏழை மக்கள்
          உழைத்த பணம்  வரியாக்கி  பல விதத்தில்
     கதவடைத்து பணம்  படைத்தார் அடிமைகளாய்
          கையூட்டில்  வாழ்வது உங்கள் குலம் கெடுக்கும்
     விதம்  விதமாய்ப் பொருட்கள் உங்கள்  வீடு  வரும்
          வினையாலே  நோய்களுமே  கூட  வரும்

    ஏய்க்காமல்  இருப்பதனால்  ஏழையானார்  
          இருந்தாலும்  நிம்மதியில் செல்வரானார்
     போய்ப் பாரும்  அவர்  பெண்டு  பிள்ளையெல்லாம்
          புரியும்  நீர்  செய்கின்ற  அநியாயங்கள்
     காய்த்திட்ட  கைகளினால்  கஷ்டப்பட்டு
          கடமை செய்து  உங்க்ளையே காத்து நிற்பார்
     ஏய்க்காதீர்  ஏழைகளை  ஏய்த்தால்  உம்மை
           இழி  நிலைக்கு  தள்ளிடுவாள் விதியாம்  தாயும்
         

Tuesday, April 29, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

   சொற்களுக்குள்  அடங்காதாம்  காமம்  என்னும்  
          சுவையதுவும் சொல்லுகின்றான் கம்ப  நாடன்
    விற்பிடித்த இராமனவன்  சென்றான்  அங்கே
          விழி கொண்ட பெண்ணொருதி  கண்டு விட்டாள்  
  பொற் பதத்தாள்   படுகின்ற  துயரம் தன்னைப்
          புகலுகின்றான்  கம்பனவ்ன்  மெல்லக் கேட்பீர்
   கற்பனையை  விரிக்கின்றான்   விரித்த  போதும்
          கனித்தமிழர்  பண்பாடும்  காத்து  நின்றான்
      



     எழுத்துக்குள்  அடங்காத  காமம்  தன்னை
          எடுத்தெழுதி வெற்றி  கண்ட  ஒவியம் போல்
     துளிர்த்தங்கு  நிற்கின்றாள்  பெண்ணொருத்தி
          துடிக்கின்றாள்  ராமனையே கண்ட பின்னர்
     கழுத்தோடு  உறவு கொண்ட அணி கலன்கள்
          கை கால்கள்  இடுப்பிலுள்ள  அணிகலன்கள
     பொருப்பாகும்  மார்பகத்தின்  அணிகலன்கள்
          பொன் நகைகள்  அத்தனையும் பறித் தெறிந்தாள்

     நெருப்பாகி  மேனியெல்லாம்  தகி தகிக்க
          நெஞ்சுக்குள்  பெருந்தீயே  கொதி கொதிக்க
     சுருக்கான இடைக்குள்ளோ  சூடு  ஏற
          சொருகுகின்ற விழிகளுக்குள்  இராமன்  ஆட
     மிடுக்கான  இராமன்  அவன்  தந்த  நோயால்
          மேனி படும்  பாட்டில்  அவள்  ஆடினாலும்
     பொறுப்பாக  தன்  உடலை  ம்றைப்பதற்காய்
          போட்டிருந்தாள் ஆடையொன்று  மேனிமேலே 

     தன்னை  இழந்தாள்  எனறே  ஒதுகின்றான்
          தங்க நகை துறந்ததையும்  ஒதுகின்றான்
     மென்நகையை  இழந்தாள்  என்றோ துகின்றான்
          மேனி தாங்க முடியாள்  என்றோ துகின்றான்
     அன்னவெல்லாம்   ஒதியவன்  ஒதுகின்றான்
           அழகு மயில்  தாங்கி  நின்ற   தொன்றே யென்று
     மென்நகையாள் ஆடை மட்டும்  தாங்கினாளாம்
           மேன்மையுறு  தமிழினம்  தான்  என்பதனால்

     கன்னலெனும்  தமிழ்க் கவிதைக்  கம்பனவன்
          காட்டி நின்ற்   இப்பெருமை உள்ளம் தன்னில்
    மின்னலென  வெட்டி நிற்கும் மெய் சிலிர்க்கும
          மேன்மை கொண்ட  தமிழினத்தைப் போற்றி நிற்கும்
     அன்னவனின்  கவிதையினைக்  க்ற்கக்க்ற்க
          ஆடி நிற்கும்  பாடி நிற்கும்  நம் மனது
     சொல் நல்ம்  கடந்ததென்ற  அந்தப்  பாடல்
          சொலலு்கின்றேன்  இதன்  பின்னர் அதனைப் பாரும்

     சொல்நல்ம்  கடந்த  காமச்சுவையை  ஒர்  உருவம்  ஆக்கி
     இன்நலம்  தெரிய  வல்லார்  எழுதியது  என்ன நின்றாள்
     பொன்னையும்  பொருவு  நீரால்,  புனைந்தன  எல்லாம் போக
     தன்னையும்  தாங்கலாதாள்  துகில் ஒன்று  தாங்கி நின்றாள்
         

         
          

தமிழைப் படியுங்கள்

அன்புடையீர்.
வணக்கங்கள்.நேற்றும் இன்றும் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள்
அதிகாலையிலேயே என்னைக் காண வந்தவர்கள் கணிப்பொறியில் அமர்ந்த
உடன் நான் கவிதைகளை தட்டச்சு செய்வதனைக் கண்டு வியந்தனர்.
இதில் வியப்பதற்கு ஒன்றுமேயில்லை.தமிழைப் படித்துக் கொண்டேயிருந்தால்
இது எளிது என்று அவர்களுக்குச் சொன்னேன்.தமிழ் மாணவர்களூக்கு
மட்டுமல்ல.கவிதையோ கதைகளோ கட்டுரைகளோ எழுத விருப்பம் கொள்ளும்
அனைவருக்கும் எனது வேண்டுகோள் இதுவே.படியுங்கள் படியுங்கள் படித்துக்
கொண்டேயிருங்கள் என்பதுதான்.வாழ்க தமிழுடன்.

தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்

மரணம் வரை படித்தான்

     நாடாளுமன்றத்தில்   குண்டு  வீசி  
          நாடனைத்தும்  தனை நோக்க  வைத்த  வீரன்
     கேடான  சைம்னையே  எதிர்த்து  மக்கள்
          கிளர்ச்சி   கொள்ள எழுச்சி பெறச் செய்த  தோழன்
     வீடல்ல நாடேதான்   பெரிது  என்று
          வீரர்களும்  உருவாகச் செய்த  சூரன்
     ஆடல்ல  மாடல்ல  நாங்கள் என்று
          ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப்  பாடியவன


     ம்ரணமே  தணடனையாய்ப்  பெற்ற  போதும்
          மகிழ்ச்சியுடன்  அதை  ஏற்ற மாம்னிதன
     உரம்  நெஞ்சில்  கொண்டவனாய்  உயர்ந்ததாலே
          உடல்  எடையும்  தினம் தினமும்  கூடிற்றம்மா
     கரம்  கூப்பி நின்றார்கள்   வெள்ளையர்கள்
          காணவொண்ணாக் காட்சி இதைக் கண்டதாலே
     சிரம் தன்னைத் தூக்கினிலே  சேர்ப்பதற்காய்
          செய்கின்றார்  ஏற்பாடு அச்சத்தோடு

     கீழ் நீதி  மன்றத்தின்  தீர்ப  பெதிர்த்தான்
          கேட்டு நின்றான் மேல்  நீதி மன்றத் தீர்ப்பை
     வாழ  விடு  என்ற்ல்ல  நாடு  காக்க
          வந்ததனால்   தூக்கு   என்று  சொல்லச் சொன்னான்
     கேடுகெட்டார்  கிரிமினல் என்று அவனைச்  சொன்னார்
          கீழ் நீதி மன்றத்தில்   அதை  எதிர்த்தான்
     நாடு  காக்க  வந்ததனால்  தூக்கு  என்று
          நாடறியச்  சொல்க  என்றே கேட்டு  நின்றான்


     ம்ரணமதை  உறுதியாக்கக்  கேட்டு  நின்ற
          மாவீரன்  தூக்கு  மேடை  ஏறும்  வரை
     விரதம்  ஒன்று  கொண்டிருந்தான்மேலும் மேலும்
          வேண்டும்  பல  நூற்களையே கற்று நின்றான்
     அருகிருந்த  நண்பர்  இதைக் கேட்ட  போது
          அவன்  ஆசை  ம்ரணம்  வரை கற்றல்  என்றான்
     பெரு விருந்து  கல்வி  அதைப்  பெற்றதால் தான்
          பேடி  வாழ்க்கை  வாழாமல்  வீரம்  கொண்டான்


     தூக்கு மேடை  ஏறுகின்றான்  அருகிருந்த
          தூய  உடை  நீதிப்தி தன்னைப்  பார்த்து
     பாக்கியம்  நீர்  செய்துள்ளீர்  உலகம்  உம்மைப்
          பார்க்கும்  வழி  கொண்டுள்ளீர் புரிகிறதா
     ஆர்க்கின்ற  மனத்தோடு   முக மலர்ந்து
          அன்னை யவள்  நாட்டிற்காயுயிர்  துறக்க
     வேர்க்கின்ற்  உடலின்றி  மிகத் தெளிவாய்
          வீரன்  நான் உயிர்  துறக்கக் காண்பீர்  நீரே

     மூடியிடா  முகத்தோடு அச்சமின்றி
          முடிகின்ற வாழ்க்கை  தாய்  நாட்டிற்கென்று
     வாடிவிடா  முகமின்றி  நெஞ்சு முற்ற
          வாழ்ந்திருந்த   மகிழ்வினையே  முகத்தில் கொண்டு
     பேடிகளாய்  வாழாமல்  இளைய  தோழர்
          பெரு வீரர்  ஆவதற்காய்  தனையே தந்த
     கோடிகளில்  ஒருவரென  வாழ்ந்த  வீரன்
          கொள்கை  பகத்சிங் அவரைப் போற்றுவோமே
     

Monday, April 28, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

     பழம் பாடல்  புதுக்கவிதை  என்று  ஒரு
          படைப்புத்தி  தந்திருந்தார்  கண்ணதாசன்
     உளம் கொண்ட  அவ்வழகு  வடிவம் தன்னில்
          உலகத்துத்  தமிழினத்தார்  அனைவருக்கும்
     தள வழியாய்ப்  பழம்  பாடல்  அழகையெல்லாம்
          தருவதற்கு நானும்  இங்கு  ஆசை கொண்டேன்
     வழி வ்ழியாய்  வந்த  தமிழ்ப்  புலமை யெல்லாம்
          வருகிறது  இவ்வழியில்  வாழ்த்த வேண்டும்


     கம்பனெனும் மாக்கவிஞன்  காட்டுகின்ற  காதலினை
          அம்புவியின் தமிழன்பர்  அனைவருக்கும்  தர  விழைந்தேன்
     கொம்பு  முலைக் கூட்டத்துக் கோலவிழிப் பெண்ணொருத்தி
          வெம்புகின்ற  தன்னுடலின் வெப்பமது  தாங்காமல்
      நம்பி  நின்ற நாயகனை  நாள்  பலவாய்க்  காணாமல்
          வம்பு செய்யும்  தன் உடலின்  வாட்டமது  தாங்காமல்
     தெம்பு  தர வருவானோ  தீண்டி வெப்பம்  தீர்ப்பானோ
          தெங்கிள நீர்  மார்பகத்தைச் சேர்ந்திடவே மாட்டானோ

     நொந்து  நின்றாள்  பெண்ணவளும்  நோவதனைத் தீர்ப்பதற்கு
          வந்து விட்டான்  நாயகனும்  வரவேற்றாள்  தாழிட்டாள்
     செந்தமிழின்  சிவப்புதட்டால்  சேர்த்தே  இறுக்குகின்றாள்
          வந்தவனோ  ம்ன்மகிழ்ந்தான்  வரவிலுள்ள தாமதத்தால்
     நொந்தவளும்  தன்னை  நோகடிப்பாள்  என நினைந்தால்
          அந்தி மழைக்  காலத்து அரவணைப்பால்  நெருக்குகின்றாள்
     தந்து விட்டாள்  தன்னை தாமதத்தால்  ஏக்கத்தால்
          என்றே கருதி  நின்றான்  இடையுறூ  வந்ததங்கு

     பல  காலம்  காத்திருந்த  ஏக்கம்  தன்னில்
          பனி மொழியாள்  தழுவி விட்டாள் தெளிந்த பின்னர்
    சில  பலவாம்  கேள்விக்ளால்  என்னை  அவள்
          சிக்கலுக்கு  ஆளாக்கக் கூடும்  என்றே
   வெல வெலத்து நிற்கின்றான்   அவளோ மெல்ல
          விலகுகின்றாள்  அவன்  முதுகைத் திருப்பிப் பார்த்தாள்
    பல  பலவாய்  எண்ணங்கள்  படையெடுக்க
          பாவி மகன்  துடிக்கின்றான்   அவளைப் பார்த்தான்

     கல கல்வென்றே   சிரித்தாள்  கண்ணசைத்தாள
          கலங்கியவன்  புரியாமல்  சிரித்து  வைத்தான்
     வல   இடமாய்  அவன் தன்னை  ஆட்டி ஆட்டி  தன்
          வடிவழகால்    கொல்லுகின்றாள சொல்லுகின்றாள
     முலை  இரண்டும்  உந்தன்  திரு  மார்பை  குத்தி
          முதுகுக்கு  வந்திருக்கும   என நினைத்தேன்
     சிலை மார்பே  உன்  மார்பு   என்றுணர்ந்தேன்
          சிரிப்பென்ன  வா  என்றே  தழுவிக் கொண்டாள்


     கம்பனது  கற்பனையைக் காட்டும்  பாடல்
          காட்டுகின்றேன்  படியுங்கள் மேலும் மேலும்
     தெம்பளிக்கும்  தமிழ்ப்பாடல்  பலவும்  தந்து
           தினம்  உம்மை  வணங்கி நிற்பேன் எனை  வாழ்த்த்ங்கள்

     கொலை உரு  அமைந்தெனக்  கொடிய  தோற்றத்தாள
     கலை உரு  அல்குலாள்  கணவர்ப் புல்குவாள்
     சிலை உரு வழி தரச் செறிந்த  மார்பிற் தன்
     முலை உருவின்  என  முதுகை  நோக்கினாள்

       தங்கள்  அன்பின் அடிமை    நெல்லைக்கண்ணன்

தமிழர் காமராஜர்

     தமிழ்த் தாயார்  ஈன்றெடுத்த  காமராஜர்
          தாய் நாட்டைக்  காக்க வந்த  பீமராஜர்
     அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
          அகிலமெல்லாம்  தமிழ்  கொணடு சென்ற ராஜர்
     வட புலத்தில்  காங்கிரஸின் தலைவராகி
          வாயாடி நின்ற தன்புத்  தமிழிலேதான்
     கடல் கடந்து  ரஷ்ய நாட்டில்  நின்ற போதும்
          கனித் தமிழே  பேசி நின்ற தனித் தமிழர்

     தான் பெறவே இயலாமல்   போன  கல்வி
          தமிழ்  ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
     ஊன் உடம்பு  உயிர் தந்த தாய்க்குக் கூட்
          உண்மைக்குப் புறம்பாக உதவாத்  தேவன்
     ஏன்  என்று  எதனையுமே கேட்டுக் கேட்டு
          ஏழைகட்காய்ச்  செய்து நின்ற  மாமனிதன்
     வான்  சென்றான்  என்கின்றார்  இல்லையில்லை
          வாழ்கின்றான்  எம்மோடு  இன்றும்  இங்கே

     ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
          ஏழையென்றே வாழ்ந்தான்  காண்  தோல்வி தந்தார்
     கோழையென  அழுதானா  இல்லை என்னைக்
          கூப்பிடுங்கள்  என்றெல்லாம்  குமுறினானா
     வாழையடி  வாழையென  காந்தி  பேரை
          வாழ்விக்க வந்தவன் காண்  செல்வனான்
     கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
          கொடை அளித்தான்  அதனாலே செல்வனான்

     ஏழையென்று  சொல்லாதீர்  அவனை  எங்கும்
          ஏற்றங்கள்  அவனாலே பெற்ற  நீவிர்
     வாழையடி  வாழையென  கல்வி  இன்று
          வந்ததுங்கள்  வீட்டிற்குள்  அவனால்ன்றோ
     பேழையென  நெய்வேலி  திருச்சியிலே
          பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
     வாழ்வதற்கு  அனைவருக்கும்  உணவளிக்கும்
          வயற்காட்டுத்  தோழருக்காய் அணைகள் தந்தான்

     ஊழை  வெல்ல  முடியாராய்  ஒடுக்கப் பட்டோர்
          ஒய்ந்திருந்த  நேரத்தில்  எழுந்து  வந்தான்
     கோழை மனம்  விட்டவரும்  கொடிகள் ஏந்தி
          கொள்கை கண்டு  வெற்றி பெற வழிகள் செய்தான்
     ஏழையல்ல செல்வன்  அவன்  என்றே  சொல்வேன்
          ஏனென்றால்  செழுங் கிளையைத்  தாங்கி  நின்றான்
     நாளை  வரும்  இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
          நல்கி நிற்பீர்   ந்ன்றி  கொல்லா நற்றமிழீர்