Wednesday, April 30, 2008

படித்த வழி நடக்க வேண்டும்

     பதவியிலே  இருக்கின்ற  படித்தவர்கள்
          படித்த வழி  நடப்பதுவே நிலை  உயர்த்தும்
     உதவுகி்ன்றார்   உங்களுக்கு  ஏழை மக்கள்
          உழைத்த பணம்  வரியாக்கி  பல விதத்தில்
     கதவடைத்து பணம்  படைத்தார் அடிமைகளாய்
          கையூட்டில்  வாழ்வது உங்கள் குலம் கெடுக்கும்
     விதம்  விதமாய்ப் பொருட்கள் உங்கள்  வீடு  வரும்
          வினையாலே  நோய்களுமே  கூட  வரும்

    ஏய்க்காமல்  இருப்பதனால்  ஏழையானார்  
          இருந்தாலும்  நிம்மதியில் செல்வரானார்
     போய்ப் பாரும்  அவர்  பெண்டு  பிள்ளையெல்லாம்
          புரியும்  நீர்  செய்கின்ற  அநியாயங்கள்
     காய்த்திட்ட  கைகளினால்  கஷ்டப்பட்டு
          கடமை செய்து  உங்க்ளையே காத்து நிற்பார்
     ஏய்க்காதீர்  ஏழைகளை  ஏய்த்தால்  உம்மை
           இழி  நிலைக்கு  தள்ளிடுவாள் விதியாம்  தாயும்
         

0 மறுமொழிகள்: