Tuesday, April 22, 2008

சிவ புராணம் வா மீத முலை எறி நூலிலிருந்து

     வைகை  வருத்தம்


     பிட்டுக்கு

     மண் சுமக்க

     பெருமானுக்கு

      வெள்ளம்

     இல்லா

     வைகைக்கு

     வருத்தம்




     வரதட்சணை



     அவிர்ப்பாகத்திற்காய்

     தாட்ச்சாயணி

     குளித்த

                 தீ

     இன்னும்

      எரிகின்றது





     காலன்




     மார்க்கண்டேய்

     அனுபவம்

     அரசு

     மருத்துவ

     மனைகளில்

     காலன்

     வாசம்




     நறுமணம்



     மன்மதனை

     எரித்த

     ஏலாமை

     நக்கீரன்

     எரிப்பில்

     தெளிந்தது



     பட்டபாடு



     சாம்பலானவன்

     படுத்தும்

     பாடே

     தாங்க

     முடியவில்லை


     எரிக்கும்

     முன்னர்

     சிவனின்

     பாடு




     வணிகம்


     வனக்காவலர்

     தொடர்பில்லாததால்

     விறகு

     விற்க

     சிவனால்

     ஏலாது




     கங்கை



     மழை நீர்

     சேகரிப்பில்

     சிவனுக்கே

     முதலிடம்



    நியாயம்

    

     சுடலைச்  சிவனார்

     தந்த

     கங்கையில்

     பிணங்கள்

     மிதப்பது

     நியாயம்தானே



     கூத்தனா    கூத்தியா



     ஆடும்  காலோ

     அம்மையின்

     கால்

     ஊன்றி

     நிற்பதோ

     அப்பனின்

     கால்

     ஆடவர்

     தயவில்

     பெண்மை

     என்பதா

     ஆடிட

     இருவரும்

     தேவை

     என்பதா



     தேர்தல்



     விற்பனை

     முடிந்த

     பிறகே

     நரிகள்

     பரிகள்

     எனத் தெரியும்

     சிவனின்

     விளையாட்டுத்

     தொடர்கின்றது

     வாங்கி

     ஏமாந்ததோ

     மக்கள்




     அடிமை




     காலை

     மாற்றாக்

     காரணம்

     முயலகன்

     மீது

     நம்பிக்கையின்மை


    - சிவபுராணம்   முற்றிற்று

     
     

1 மறுமொழிகள்:

said...

அருமை..அருமை..