Thursday, April 10, 2008

அம்மா சொன்னாள்

   
    ஏலெ  
    ஏய்
    எழவெடுத்த பயலே
   இருக்கதெ
   தின்னுட்டு
   எங்கயும்  போய்த்
   தொலை

   வேல கெடைக்கட்டும்
   கெடக்காம
   ஒழியட்டும்

   வெவரங்கள்
   பல
   இருக்கு
   ஊரெல்லாம்
   அறியட்டும்
  
   சாலையிலே
   நின்னு
   நம்ம
   
  சரித்திரத்தை
  சொல்லியழு
  மேல  வீட்டுப்
  பெருமையையும்
  மேக்க
  வித்த
  வயக்காடும்

  நானூறு
  பவுன்
  ந்கையும்

  நாசமாப்
  போன  கதை!

  என்னிக்கு
  நெனச்சீக
  
  இருக்கதெல்லாம்
  வித்தொழிச்சும்
  
  பண்ணையார்
  குடும்பமுண்ணு

   பவுசு  என்ன
  வெக்கமில்ல

0 மறுமொழிகள்: