Tuesday, April 29, 2008

தமிழைப் படியுங்கள்

அன்புடையீர்.
வணக்கங்கள்.நேற்றும் இன்றும் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள்
அதிகாலையிலேயே என்னைக் காண வந்தவர்கள் கணிப்பொறியில் அமர்ந்த
உடன் நான் கவிதைகளை தட்டச்சு செய்வதனைக் கண்டு வியந்தனர்.
இதில் வியப்பதற்கு ஒன்றுமேயில்லை.தமிழைப் படித்துக் கொண்டேயிருந்தால்
இது எளிது என்று அவர்களுக்குச் சொன்னேன்.தமிழ் மாணவர்களூக்கு
மட்டுமல்ல.கவிதையோ கதைகளோ கட்டுரைகளோ எழுத விருப்பம் கொள்ளும்
அனைவருக்கும் எனது வேண்டுகோள் இதுவே.படியுங்கள் படியுங்கள் படித்துக்
கொண்டேயிருங்கள் என்பதுதான்.வாழ்க தமிழுடன்.

தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்

0 மறுமொழிகள்: