Monday, April 28, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

     பழம் பாடல்  புதுக்கவிதை  என்று  ஒரு
          படைப்புத்தி  தந்திருந்தார்  கண்ணதாசன்
     உளம் கொண்ட  அவ்வழகு  வடிவம் தன்னில்
          உலகத்துத்  தமிழினத்தார்  அனைவருக்கும்
     தள வழியாய்ப்  பழம்  பாடல்  அழகையெல்லாம்
          தருவதற்கு நானும்  இங்கு  ஆசை கொண்டேன்
     வழி வ்ழியாய்  வந்த  தமிழ்ப்  புலமை யெல்லாம்
          வருகிறது  இவ்வழியில்  வாழ்த்த வேண்டும்


     கம்பனெனும் மாக்கவிஞன்  காட்டுகின்ற  காதலினை
          அம்புவியின் தமிழன்பர்  அனைவருக்கும்  தர  விழைந்தேன்
     கொம்பு  முலைக் கூட்டத்துக் கோலவிழிப் பெண்ணொருத்தி
          வெம்புகின்ற  தன்னுடலின் வெப்பமது  தாங்காமல்
      நம்பி  நின்ற நாயகனை  நாள்  பலவாய்க்  காணாமல்
          வம்பு செய்யும்  தன் உடலின்  வாட்டமது  தாங்காமல்
     தெம்பு  தர வருவானோ  தீண்டி வெப்பம்  தீர்ப்பானோ
          தெங்கிள நீர்  மார்பகத்தைச் சேர்ந்திடவே மாட்டானோ

     நொந்து  நின்றாள்  பெண்ணவளும்  நோவதனைத் தீர்ப்பதற்கு
          வந்து விட்டான்  நாயகனும்  வரவேற்றாள்  தாழிட்டாள்
     செந்தமிழின்  சிவப்புதட்டால்  சேர்த்தே  இறுக்குகின்றாள்
          வந்தவனோ  ம்ன்மகிழ்ந்தான்  வரவிலுள்ள தாமதத்தால்
     நொந்தவளும்  தன்னை  நோகடிப்பாள்  என நினைந்தால்
          அந்தி மழைக்  காலத்து அரவணைப்பால்  நெருக்குகின்றாள்
     தந்து விட்டாள்  தன்னை தாமதத்தால்  ஏக்கத்தால்
          என்றே கருதி  நின்றான்  இடையுறூ  வந்ததங்கு

     பல  காலம்  காத்திருந்த  ஏக்கம்  தன்னில்
          பனி மொழியாள்  தழுவி விட்டாள் தெளிந்த பின்னர்
    சில  பலவாம்  கேள்விக்ளால்  என்னை  அவள்
          சிக்கலுக்கு  ஆளாக்கக் கூடும்  என்றே
   வெல வெலத்து நிற்கின்றான்   அவளோ மெல்ல
          விலகுகின்றாள்  அவன்  முதுகைத் திருப்பிப் பார்த்தாள்
    பல  பலவாய்  எண்ணங்கள்  படையெடுக்க
          பாவி மகன்  துடிக்கின்றான்   அவளைப் பார்த்தான்

     கல கல்வென்றே   சிரித்தாள்  கண்ணசைத்தாள
          கலங்கியவன்  புரியாமல்  சிரித்து  வைத்தான்
     வல   இடமாய்  அவன் தன்னை  ஆட்டி ஆட்டி  தன்
          வடிவழகால்    கொல்லுகின்றாள சொல்லுகின்றாள
     முலை  இரண்டும்  உந்தன்  திரு  மார்பை  குத்தி
          முதுகுக்கு  வந்திருக்கும   என நினைத்தேன்
     சிலை மார்பே  உன்  மார்பு   என்றுணர்ந்தேன்
          சிரிப்பென்ன  வா  என்றே  தழுவிக் கொண்டாள்


     கம்பனது  கற்பனையைக் காட்டும்  பாடல்
          காட்டுகின்றேன்  படியுங்கள் மேலும் மேலும்
     தெம்பளிக்கும்  தமிழ்ப்பாடல்  பலவும்  தந்து
           தினம்  உம்மை  வணங்கி நிற்பேன் எனை  வாழ்த்த்ங்கள்

     கொலை உரு  அமைந்தெனக்  கொடிய  தோற்றத்தாள
     கலை உரு  அல்குலாள்  கணவர்ப் புல்குவாள்
     சிலை உரு வழி தரச் செறிந்த  மார்பிற் தன்
     முலை உருவின்  என  முதுகை  நோக்கினாள்

       தங்கள்  அன்பின் அடிமை    நெல்லைக்கண்ணன்

0 மறுமொழிகள்: