Tuesday, April 15, 2008

வடிவுடைக்காந்திமதியே நூலிலிருந்து

உழுபவர் வாழ்க்கையில் அழுகையே என்றுமே

உற்சாகம் கொள்வதென்ன

உழைப்பவர் தங்களால் உயர்ந்தவர் செல்வத் தோ

டுறவுகள் கொள்வதென்ன

அழுகையும் வறுமையும் உழைப்பவர் சொத்தென

அகிலமே வாழ்வதென்ன

அவர்களால் உயர்ந்தவர் சுகத்தின் மேல் சுகங்களை

அடைவதில் நியாயமென்ன

பழுதுடைச் சமுதாய அமைப்புக்கள் தன்னையே

பார்த்துமேன் மெளனம் தாயே

பழமதை மூத்தோனுக் களித்தங்கு இளையோனின்

பழி கொண்ட காந்திமதியே

0 மறுமொழிகள்: