Saturday, April 19, 2008

என்றோ எழுதியது

     நாயொன்று   புலம்பிக்  குரைத்தது  

          நல்ல  நடு நிசித்  தனிமையிலே

     தாயொடு  தந்தையும்  அண்ணனும்

          தம்பியும்  தகைமை சேர்  நண்பர்களும்

     வாயொடு  நெஞ்சின்  தொடர்பின்றி  என்மேல்

          வார்த்திட்ட  பாசங்களை

     காயமாய்க்  காயமாய்க்  காயமாய்க்   காயமாய்க்

          காய்த்திட்ட   நெஞ்சமதில்

     ஒயாமல்  போட்டு  நான்  ஆற்றிட எண்ணிய

          உன்மத்த  நிலை  நினைந்தேன்

     நாயொன்று  புலம்பிக்  குரைத்தது

           நல்ல   நடு நிசித் தனிமையிலே                

     ஒயாது  ஒயாது   ஒயாது   ஒயாது

          ஒயாது   குரைத்ததுவே


   

          

          

0 மறுமொழிகள்: