Wednesday, April 23, 2008

அறியேன் அய்யா கவிதை

     ஆகாயம்  தனில்   எங்கும்   எல்லை  கண்டார்

          அலை  கடலில்  நதிகளிலே   எல்லை   கண்டார்

     பூகோளம்  என்றாலே  எல்லைகளால்

          பொலிவதுதான்   என்றிங்கு  படங்கள்  தந்தார்

     ஆகா  இக்காற்றை  மட்டும்   எல்லை  காட்டி

          அடைத்து  வைக்க   மானிடரால்   முடிய்வில்லை

     சாகும்  வரை  மனித  குலம்  வாழ்வதற்காய்

          சத்தியமாய்க்  காத்தவரை  அறியேன்  அய்யா

          

1 மறுமொழிகள்:

said...

ஆமாம் அய்யா..காற்றுக்கு மட்டும்தான் எல்லை வகுக்கவில்லை மனிதன். அதற்கும் ஏதாவது உபாயம் கண்டுவிட்டால்...அப்போதும் கர்நாடகத்திடம் நாம் காற்றுகேட்டு போராடும் நிலை வந்துவிடும்.

கவிதை அருமை அய்யா!