Tuesday, April 15, 2008

இன்றைய கவிதை நல்லரசாக்குங்கள்

     நல்லதே  சொல்லி   நல்லதே  சொல்லி

          நாட்டினை   உயர்த்தி   நில்லுங்கள

     சொல்லதால்   நல்ல  சொல்லதால்  நமது

          சுற்றம்  போற்ற  வாழுங்கள்

     கல்வியால்   நல்ல   கல்வியால்   இந்த

          ககனம்   தன்னை    வெல்லுங்கள்

     வல்லமை  என்றால்   நல்லவை  என்று

          வாழ்ந்தே  காட்டி  வெல்லுங்கள்



     உண்மையைச்  சொல்லி   உண்மையைச்  சொல்லி

          உலகின்  முன்னே   செல்லுங்கள்

     நன்மைகள்   விளையும்     நன்மைகள்   விளையும்

          நானிலம்  போற்ற  வாழுங்கள்

     வண்மையே  செய்து   வ்ண்மையே  செய்து

          வாழ்வினில்  மேன்மை   கொள்ளுங்கள்

      வல்லரசு  என்ற  பேரே  வேண்டாம்

          நல்லரசாய்    நாட்டை  ஆக்குங்கள்

                                                         நெல்லைகண்ணன்


    


          

0 மறுமொழிகள்: