Wednesday, April 16, 2008

வாழ்க தமிழுடன் இன்றைய கவிதை

     வணக்கங்கள்  தமிழன்பர் அனைவருக்கும்

          வாழ்க  தமிழுடன்  என்று  வாழ்த்தும்  சொன்னேன்

     இணக்கங்கள்  கொணடவராய்  தமிழர்  வாழ

          இணையதளம்  வழியாயும்  ஆசை கொண்டேன்

     பிணக்குக்கள்  இல்லாராய்   உலகம்  வாழ

          பேசி  நின்ற  இனம்  நந்தம்   தமிழர்  இனம்

     கணக்கு வழக்கின்றி  இன்று  பிரிந்து  நிற்கக்

          காண்கையிலே  மனம்   நிறைய துடிக்குதையா



     சாதி சொல்லி மென்மேலும்  சண்டையிட்டு

          சாத்திரங்கள்  அறியாமல்  துண்டு பட்டு

     வாதித்து  வாதித்து  பேச்சி  ழந்து

          வாசல்  தொறும்  மதம்  பேசி  வம்பு செய்து

     போதித்த  அன்பு வழி  மறநது   விட்டு

          பொல்லாங்கு  தேடுகின்றார்  மாற வேண்டும்

     சாதிக்கப்  பிறந்த  நந்தம்  தமிழரினம்

          சான்றாண்மை  கொண்டு யர்ந்து  நிற்றல்  வேண்டும்

0 மறுமொழிகள்: