Sunday, April 20, 2008

மலைகள் காப்போம்

அவங்கவங்க ஊர் மலையை
அந்தந்த மக்கள்
அப்பனைப்போல் அம்மையைப்போல்
காப்பாத்த வேண்டும்
தவறிக்கொஞ்சம் அசந்திருந்தா
மலை ஒழிஞ்சு போகும்
தடித்தடியாய் கிரானைடா
வெளிநாடு போகும்!
கவலையதைச் சொல்லிப்புட்டேன்
காப்பாத்தலேன்னா
கடவுள் இனி நல்லதுக்குத்
துணைக்கு வர மாட்டார்

2 மறுமொழிகள்:

said...

அருமையான சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதை...
சிந்தனை சிறியதாயினும் சிறப்புடையது.

said...

பணமே கடவுளென்று
பாவிமக்கள் தேடுகின்றார்
குணமே இல்லாதார்
குறிப்பறிய மாட்டாரே!