Monday, April 28, 2008

காந்தியடிகளும் தமிழும்

     தமிழ்த்தாயாம்   தில்லையாடி  வள்ளியம்மாள்
          தான் தந்த  போராட்டப்  பேருணர்வே
     அமிழ்ந்திருந்த  இந்தியத்  தாய்  விடுதலைக்கு
          ஆளாக்கித்  தந்ததெனை  வணங்குகின்றேன்
     தமிழன்னை  பெற்றெடுத்த தவப்புதல்வர்
          தங்க  நிகர்  வள்ளுவரின்   திருக்குறளை
     தமிழிலேயே கற்றுவிட  ஆசை  கொண்டேன்
          தரவில்லை இறைவன்  அந்தப் பேரருளை
     அமிழ்தான தமிழ்முதை  இந்தியத்தார்
          அனைவருமே   கற்று விட்டால் ஒன்றாயாவார்

     இவையெல்லாம்  காந்தி  மகான்  வார்த்தையாகும்
          ஏற்றிருந்தால்  இந்தியாவே வென்று  நிற்கும்
     கவைக்குதவா  வேலையெல்லாம்  செய்து நிற்பார்
          கண்ட்தில்லை  நல்ல்தெல்லாம்  என்ன் செய்ய
    அவையினிலே  வெல்லுதற்கு  அனைவருமே
          அன்னை மொழி த்னில்  கல்வி கற்றல் வேண்டும
     சுவையதுவே  என்று  சொன்னார்  அண்ணல்  அவர்
          சுத்தமாக  மறந்து இன்று  தமிழ்  ஒழித்தோம்
   
     

0 மறுமொழிகள்: