Wednesday, July 1, 2009

துறந்து நின்றார்

கற்பெனவே ஒரு சொல்லை வைத்துக் கொண்டு
கதைக்கின்றார் கதைக்கின்றார் ஆடவர்கள்
சொற்பெருக்கு ஆற்றுகின்றார் ஆடுகின்றார்
சுத்தம் என்றும் ஒழுக்கம் என்றும் பிதற்றுகின்றார்
கற்பு எனும் ஒழுக்கத்தை தாங்களும் தான்
கடைப் பிடிக்க வேண்டும் என்றல் மறந்து நின்றார்
அற்புதத்தான் பாரதியாம் மகாகவியும்
அன்று சொன்ன வார்த்தையினை துறந்து நின்றார்

0 மறுமொழிகள்: