Wednesday, July 22, 2009

ஒன்று சேர்வோம்

செய்த நன்றி மறந்தாரைக் காணும் போது
சிறுமை செய்ய நாணாதார் காணும் போது
பொய்யொன்றே பேசி நிற்பார் காணும் போது
புரட்டாலே வாழ்ந்திடுவார் காணும் போது
கையூட்டால் வாழ்ந்திடுவார் காணும் போது
கரவான துறவியரைக் காணும் போது
மெய்யெல்லாம் துடிக்கிறதே என்ன செய்வோம்
மெய் காக்க அனைவருமே ஒன்று சேர்வோம்

1 மறுமொழிகள்:

said...

பாரதியாருடன் ஒத்த வலிவை -
பார்த்தேன் உங்கள் வரிகளில் இன்று..!!

நன்றி ஐயா..!!