Thursday, July 9, 2009

மனிதனாக்கி வைத்தார்

குறள் கற்ற காரணத்தால் மனத்துக்குள்ளே
குறு குறுப்பு தவி தவிப்பு தெளி நினைப்பு
பிறழ்கின்ற மனம் தன்னை நெறியதாக்கி
பிறர் போற்ற வாழ வைத்த பெரு உயர்வு
இறந்தாலும் பெருங் காலம் வாழ்வதற்கு
இயல்பாகி வந்தமைந்த நல்ல குணம்
சிறந்தோங்கச் செய்தார் எம் வள்ளுவரும்
சீராக்கி எமை மனிதனாக்கி வைத்தார்

0 மறுமொழிகள்: