Monday, January 26, 2009

மாற்றித் தொலைத்ததாலே

மக்களாட்சி பெறுவதற்காய் தம்மைத் தந்த
மாபெரிய வீரர்களை வணங்கி நிற்போம்
தக்க அந்த வீரர்களின் பின்னால் சென்று
தமைத் தந்த மக்களையும் வணங்கி நிற்போம்
எக்கணமும் அவர் பெருமை போற்றி நிற்போம்
இதயத்துள் வைத்தவரை ஏற்றி நிற்போம்
செக்கிழுத்து உயிர் தந்து உறவிழந்த
சீராளர் அனைவரையும் நினைந்து நிற்போம்



மக்களாட்சி இன்றும் இங்கே நிலைத்திருக்கும்
மணம் கண்டு மனம் மிகவும் மகிழ்கின்றது
பக்கம் உள்ள நாடுகளில் இராணுவமே
பல ஆண்டாய் ஆள்கிறது கேவலம்தான்
தக்க விதம் வாழ்கின்றோம் என்ற போதும்
தலைவர்களைக் காண்கையிலே எரிகின்றது
மக்களாட்சி என்பதனைத் தங்களது
மக்களாட்சி என்று மாற்றித் தொலைத்ததாலே

0 மறுமொழிகள்: