Thursday, January 15, 2009

வாலி என்னும் கண்ணியத்தார்

கடலே என் றரவணைத்தார் வாலி என்னும்
கண்ணியத்தார் உடை போன்ற உள்ளம் கொண்டார்
தடம் மாறிப் போகின்ற தமிழினத்தை
தமிழ்ப் பேச்சால் உணர வைத்து திருத்துகின்றீர்
புடம் போட்டு புடம் போட்டுத் தமிழர் தம்மின்
பொன்னான இலக்கியங்கள் போற்றுகின்றீர்
இடம் போட்டு என்னுளத்தில் உம்மை வைத்தேன்
ஏற்றி உம்மைப் போற்றுகின்றேன் வாழ்க என்றார்

0 மறுமொழிகள்: