Thursday, June 18, 2009

கம்பனின் வாலி பதில் இன்றும் இல்லை

மறைந்திருந்து அம்பு விட்ட மன்னவனை
மனத்திற்குள் தெய்வமெனப் போற்றி வாழும்
நிறைந்திருக்கும் நல் மனத்தான் வாலி தானும்
நேர் படவே கேட்கின்றான் கேள்வி ஒன்றை
மறைவாக உன் மனையாள் தன்னை தூக்கி
மனத்துள்ளே சிறை வைத்த அரக்கன் விட்டு
குறையில்லா ஆட்சி கொண்ட குரங்கு என்னை
கொல்வதற்கு முயன்றுள்ளாய் என்ன நியாயம்


இரக்கமே உனை நம்பி வாழ நீ அந்த
இரக்கத்தைக் கை விட்டாய் மிகச் சிறந்த
தரமான புகழையும் நீ விட்டு விட்டாய்
தனியாகிப் போனாயே என்தலைவா
உறக்கத்தில் கூட ஒரு தவறு செய்ய என்றும்
உன்னாதாய் மனு நெறியில் இவ்வாறெல்லாம்
கிறுக்காகத் தீர்ப்பளிக்க வழியுளதோ?
கேட்கின்றான் வாலி பதில் இன்றும் இல்லை

0 மறுமொழிகள்: