Saturday, June 13, 2009

என்றும் வாழ்க

விருந்தோம்பல் தமிழர்களின் வெற்றி என்று
விரித்துரைப்பார் என் தாயும் என்னிடத்தில்
கரும்பாக விருந்தோம்பல் தன்னைக் கண்டேன்
கனிவான மணி ராமின் அன்பு வீட்டில்
அரும்பான முல்லை மலர்ச் சிரிப்பினோடு
அன்பு ராதா பானு தந்த உணவு எல்லாம்
சிறந்தோங்கி நின்றதெந்தன் தமிழைப் போல
சீர் கொண்டு அன்பரவர் என்றும் வாழ்க

1 மறுமொழிகள்:

said...

ஐயாவுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு உரையாடியது மனதுக்கு மிகவும் அமைதியாக இருக்கிறது. தமிழ் கடலுடன் எப்பொழுது பேசினாலும் செவிக்கின்பம்தான். அலையில் ஆர்ப்பரிப்பில் மயங்காதவர் யார் ????