Sunday, June 14, 2009

உணர்வீர் நீரே

வாழுவதை மகிழ்ச்சியாக வாழ்ந்திருத்தல்
வகையாக அன்பு செய்து வாழ்ந்திருத்தல்
சூழுகின்ற நல்லதெல்லாம் கொண்டிருத்தல்
சொல்லெல்லாம் உண்மையெனக் கொண்டிருத்தல்
பேணுகின்ற நன்மையெல்லாம் பெரிதாய்க் கொள்ளல்
பெரியவரைப் போற்றுதலை உயிராய்க் கொள்ளல்
காணுகின்ற நல்லதெல்லாம் போற்றி நிற்றல்
கடவுள் சொல்லும் வழி நன்கு உணர்வீர் நீரே

0 மறுமொழிகள்: