Monday, June 22, 2009

பெண்ணுரிமைப் பொய்

பெண்களுக்கு எப்பொழுதும் எங்கும் துன்பம்
பேசுவதோ மேடை தோறும் பெண்ணுரிமை
கண்கள் எங்கள் பெண்கள் என்று கதைத்து நிற்றல்
கவிதைகளில் காவியத்தில் பெண் பெருமை
புண்கள் இந்தப் புண்கள் புரையோடிப் போக
பொய்யெல்லாம் மெய் போல ஆடி நிற்க
தங்கள் தாயவளோ முதியோர் இல்லத்தில்
தாரமதோ நீதி மன்றில் மண முறிவிற்கு

0 மறுமொழிகள்: