Thursday, May 27, 2010

என் மகன் பழனி பாரதி

எழுதுதற்கு என்னைத்தான் இசைய வைத்தான்
இசைய வைத்து இசை எனக்குச் சேர வைத்தான்
பழுது இல்லா நல் மனத்தான் எந்தன் மீது
பாசமதைப் பொழிகின்ற பெருங்குணத்தான்
அழுது நிற்பேன் ஆறுதல்கள் சொல்லி நிற்பான்
அய்யா அய்யா என்பான் அன்புணர்வேன்
விழுது இவன் என்றனக்கு என் மகன் தான்
வெல்க பழநிபாரதியே மகனே வெல்க

1 மறுமொழிகள்:

said...

தங்களைத் தந்தையென அழைக்கும் பேறு பெற்றவர்களில் முதன்மையானவர் பழனிபாரதி அவர்கள்.! உங்கள் அன்புக்கு முன்னால் நாங்களெல்லாம் எம்மாத்திரம் அய்யா!