Monday, May 24, 2010

நல்லவரின் பொறுப்பே ஆகும்

தாம் செய்த தவறுகளை மறந்து விட்டு
தடித்தனமாய் மற்றவர் மேல் பழிகள் போடும்
பேய் மனத்தார் என்றென்றும் திருந்த மாட்டார்
பிழை அனைத்தும் தான் செய்தால் சரிதான் என்பார்
காய்ந்து நிற்பார் மற்றவரைத் தடித்தனமாய்
கண்ணியமே அற்ற மொழி பேணி நிற்பார்
ஆய்ந்தவரின் மன நோயைப் புரிந்து கொண்டு
அமைதி காத்தல் நல்லவரின் பொறுப்பே ஆகும்

0 மறுமொழிகள்: