Friday, May 21, 2010

ராஜீவை எண்ணி எண்ணி

நாடு காத்த நல்லவனை உலகம் போற்றும்
நலமான புதுமைகளை நல்கினானை
கேடு என்ற வார்த்தைக்குப் பொருளறியாக்
கேண்மை கொண்டு உயர்ந்தானைச் சிறந்தவனை
தேடி நல்ல நன்மைகளைச் செய்து நின்ற
திருமகனை அழகான இளையோன் தன்னை
கேடு மனம் கொண்ட தீயோர் வெடித்தொழித்தார்
கேவுகின்றோம் ராஜீவை எண்ணி எண்ணி

0 மறுமொழிகள்: