Wednesday, February 4, 2009

பட்டுகோட்டையார்

ஏழைகளின் மொழியினிலே ஏழைகட்காய்
எப்போதும் எழுதி நின்ற இயக்க மவன்
கோழைகளின் மனத்தினிலும் கொள்கைகளை
கூத்தாட வைத்து நின்ற போர்க் கவிஞன்
வாழையடி வாழையாகக் கூனி நின்ற
வகையாரின் குறுக் கெலும்பாய் வந்த தோழன்
நாளை வரும் வாழ்க்கையதை ஏழைகளின்
நலம் காணும் வழியினிலே பாட்டிசைத் தான்


தூங்குவதில் சுகம் கண்டார் தனை எழுப்பி
தொண்டு செய்ய வழி சொன்ன உண்மைத் தோழன்
ஏங்கி நிற்பார் திருடாமல் இருப்பதற்கு
இருப்பவரே காரணமென்று உரைத்த நண்பன்
வாங்கி வாங்கிச் சேர்த்தவர்கள் தராத போது
வயிறு பசித்தழுபவர்க்காய் வழிகள் சொன்னான்
ஓங்கி நல்ல வழிகளெல்லாம் சொல்லி நின்ற
உயர் பட்டுக்கோட்டையாரின் வழியில் நிற்போம்

0 மறுமொழிகள்: