Sunday, February 8, 2009

தமிழரிங்கு

எத்தனையோ பேர் சொன்னார் கேட்டா வாழ்ந்தீர்
எவரெவரோ சொன்னாலுமுணர்ந்தா வாழ்ந்தீர்
வித்தகமாய்ப் பேசிடுவீர் மேலும் மேலும்
விளக்கங்கள் கூறிடுவீர் தவறையெல்லாம்
மொத்தமெனக் குத்தகைக்கு நீரே கொள்வீர்
முத்தமிழா உமக்கேதான் சொந்தம் என்பீர்
எத்துவாளித்தனம் எல்லாம் உமக்கே சொந்தம்
என்ன செய்ய நாங்களும் தான் தமிழரிங்கு

0 மறுமொழிகள்: