Monday, February 9, 2009

மேன்மையாவீர்

மண்டியிட்டுத் தொழுபவரும் மனத்திற்குள்ளே
மந்திரங்கள் சொல்பவரும் சிலுவை முன்னே
தெண்டனிட்டு நிற்பவரும் அனைவருமே
தெய்வமதை மனதில் கொண்டு நிற்பவர் தான்
கொண்ட தெய்வநம்பிக்கை உண்மை யென்றால்
கோஷங்கள் சண்டைகள் இங்கெதற்கு
ஒன்றிணைவீர் சண்டை விட்டுத் தெய்வம் தன்னை
உண்மையென்று உணர்ந்தால் நீர் மேன்மையாவீர்

கோயிலுக்குள் நிற்பவரும் இறைவன் தன்னைக்
கொண்டாடித் துதிப்பவர் தான் ஐந்து வேளை
தானிருக்குமிடத்தினிலே இறைவன் தன்னை
தான் பணிந்து தொழுபவரும் சிறந்தவர் தான்
வானிருந்து வந்த மகன் சிலுவை தன்னை
வணங்கி நிற்கும் அன்பருமே நல்லவர் தான்
நாணாமல் சண்டையிட வழி வகுக்கும்
நலமற்றோர் தனை ஒதுக்கி வெல்ல வேண்டும்

0 மறுமொழிகள்: