Thursday, February 19, 2009

சொந்தமில்லை

கை கட்டி வாய் பொத்தி பிச்சையேற்றுக்
கனித்தமிழை முறையாக உணர்ந்தவர்கள்
பை தன்னை நிரப்புதற்காய் மானம் விட்டு
பைத்தியங்கள் முன்னாலே நிற்பதில்லை
வைதாலும் ஆளை வைத்து மிரட்டினாலும்
வண்டமிழை யாரிடத்தும் விற்பதில்லை
பொய்யாக வாழ்ந்திடவே நடிப்பார் சிலர்
பொதிகைத் தமிழ் அவருக்குச் சொந்தமில்லை

1 மறுமொழிகள்:

said...

//பொய்யாக வாழ்ந்திடவே நடிப்பார் சிலர்
பொதிகைத் தமிழ் அவருக்குச் சொந்தமில்லை//

முற்றிலும் சரி அய்யா!
கட்டாயமாக பொய்யர்களை தமிழன்னை மன்னிக்கவும் மாட்டாள்..மதிக்கவும் மாட்டாள்!