Saturday, February 21, 2009

ஒதுங்கி விடும்

மரணத்தை நோக்கியே பயணங்கள் அனைத்துமே
மனதினில் கொண்டு வாழ்வார்
மனிதனாய் வாழ்வதில் மனங் கொண்டு மனங்கொண்டு
மனிதருக்கு உதவி நிற்பார்
சரணமாய் இறைவனின் சந்நிதி முன் நிற்பார்
சத்தியம் கொண்டு வாழ்வார்
சகலரும் வாழ்ந்திட தன்னையே தந்திடும்
சமரச வாழ்வு வாழ்வார்


கோடிகள் கொண்டிட எண்ணங்கள் கொண்டவர்
கொள்கைகள் இன்றி வாழ்வார்
குடும்பத்தை அன்றியே ஊரினில் யாரையும்
கூட்டாக எண்ண மாட்டார்
நாடி தளர்ந்தெலாம் ஒடுங்கிய பின்னரும்
நல்லதை நாட மாட்டார்
நல்லவை இவர் வீட்டு வாயிலைக் காணவே
நாணியே ஒதுங்கி விடும்

0 மறுமொழிகள்: