Friday, February 6, 2009

வாங்கிடுங்கள்

இயல்பான வாழ்க்கை யதை வாழ்ந்திருந்தால்
எல்லார்க்கும் எப்போதும் துன்பம் இல்லை
அயலாரைப் பார்த்தவர் போல் வாழ்வதற்காய்
ஆசைகளைக் கொள்வதிலே அர்த்தமில்லை
துயரங்கள் துன்பங்கள் என்பதெல்லாம்
தூரவே சென்று விடும் ஆசை விட்டால்
அயர்வின்றி மனம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்
அனைவருமே வாழ்த்தி நிற்பார் வாங்கிடுங்கள்

0 மறுமொழிகள்: