Saturday, February 21, 2009

நல்லோர் உள்ளில்

இறந்து விட்டார் என்ற செய்தி வந்த பின்பே
இருந்ததுவே தெரிகிறது நமக்கு இங்கு
இருக்கையிலே இறந்து விட்ட இவரின் வாழ்க்கை
எதற்கென்று தெரியாமல் குழம்புகின்றோம்
பிறந்து விட்ட காரணத்தால் வாழ்ந்த இவர்
பிரிந்ததிலே யாருக்கும் வருத்தமில்லை
சிறந்திருந்தார் மரணமதோ என்றும் என்றும்
சிந்தனையில் நிற்கிறது நல்லோர் உள்ளில்

0 மறுமொழிகள்: