Wednesday, February 4, 2009

சுடலைமாடன்வருவான்

இருநூறு ருபாய்க்காகச் சிறுமியினை
இப்படியும் அப்படியும் உதைக்கின்றாரே
பல நூறு கோடிகளை வெட்கமின்றி
பங்கிட்டு வாழுகின்ற தலைவர்களை
திரு நாட்டின் கேவலமாய் நாணமின்றி
தேர்தல் தோறும் வருகின்ற திருடர்களை
வறுத்தெடுக்கச் சுடலை மாடன் வருவான் என்றே
வணங்கி நின்றுக் குலவையிட்டோம் வருவான் அவன்

0 மறுமொழிகள்: