Tuesday, March 10, 2009

தமிழோடு வாழுகின்றேன்

எப்போதும் நல்லதே நினைப்பவர் செய்பவர்
என்றென்றும் வாழுகின்றார்
ஏய்ப்பதே தொழிலாகக் கொண்டிங்கு மகிழ்பவர்
இருக்கையில் மாளுகின்றார்
தப்பேதும் இல்லாத வாழ்க்கையை அருளினாய்
தலைவனே வணங்கி நின்றேன்
தனியனாய் மாண்டாலும் தமிழர்கள் எனக்காக
தான் அழும் வாழ்க்கை தந்தாய்


எப்போது அழைப்பாய் நீ என்பது தெரியாமல்
ஏழை நான் வாழுகின்றேன்
இருந்தாலும் அழைப்பினை எதிர்பார்த்து எதிர்பார்த்து
இன்றும் நான் ஏங்குகின்றேன்
தப்பாகிப் போன இவ்வுறவுகள் மத்தியில்
தனியாகித் தூங்குகின்றேன்
தலைவா நீ அருள்கின்ற தூக்கத்திற்காகவே
தமிழோடு வாழுகின்றேன்

0 மறுமொழிகள்: