Friday, March 6, 2009

உணருங்கள்

வாழ்கின்ற போதிலே வாழுங்கள் மனிதராய்
வளமெலாம் பிறர்க்கு உதவி
வந்தவர் பசி தனைத் தீர்ப்பதில் மனங் கொண்டு
வயிறாரச் சோறு இடுங்கள்
சூழ்கின்ற வாழ்வதில் நல்லதே கொள்ளுங்கள்
சுற்றிலும் நன்மை பெருகி
சுகமதே சுகமதே மிகப் பெருஞ் சுகமதே
சோதித்துப் பின் உணருங்கள்

0 மறுமொழிகள்: