Friday, March 20, 2009

போற்றி நிற்போம்

தமிழ் கற்றார் தன் நிலையை இழப்பதில்லை
தனக்காகப் படித்தாரே தாழ்ந்து நின்றார்
அமிழ்தல்ல நந்தம் மொழி அனைவருக்கும்
அன்னையெனச் சோறூட்டும் அன்பு மொழி
உமிழ் நீரும் தேனாக்கும் அன்பு மொழி
உலகு காக்கச் சொல்லி நிற்கும் தாயின் மொழி
கமழ்கின்ற சந்தனமா இல்லை யில்லை
கண்ணீரைத் துடைக்க வந்த கருணை மொழி


எந்நாடும் நம் நாடு உலக மக்கள்
எல்லாரும் நம் உறவு என்று சொன்ன
பன்னாட்டுச் சிந்தனையை உலகுக்கீந்த
பனிக் கணியன் பூங்குன்றன் நந்தம் தாத்தா
சொன்னார்கள் நல்லதெல்லாம் உலகம் வாழச்
சொன்னார்கள் நமக்கென்று மட்டுமின்றி
கண்ணாகப் போற்றி அந்த வழியில் வாழ்ந்து
கண்ணியத்துத் தமிழ் அன்னை போற்றி நிற்போம்

0 மறுமொழிகள்: