Saturday, March 14, 2009

என்ன செய்வேன்

அன்பு செய்யப் பழகாமல் மனிதரெல்லாம்
அழுதழுது வாடுகின்ற கேடு கண்டேன்
பண்பு கொண்டு வாழாமல் பணத்திற்காக
பரிதவித்து அலைகின்ற சோகம் கண்டேன்
நண்பரென்று நல்லவரைக் கொள்ளாராகி
நாடெங்கும் புலம்பி நிற்கும் அவலம் கண்டேன்
என் செய்வேன் என்னிறையே இவரைக் கண்டு
இரக்கங்கள் கொள்வதன்றி என்ன செய்வேன்

0 மறுமொழிகள்: