Friday, March 6, 2009

கடவுளின் அன்பராகி

சேர்த்திங்கு வைத்ததை சேமித்து வைத்ததை
செத்த பின் கொண்டு செல்ல
சிவனவன் அனுமதி தந்ததேயில்லையே
சேர்ப்பார்கள் உணர்வதிலையே
கோர்த்திங்கு கொண்டிட்ட கொள்ளைகள் அனைத்தையும்
கூடவே கொண்டு செல்ல
கூத்தாடும் ஆண்டவன் வழி விடவில்லையே
கொள்ளையர் அறிவதிலையே
ஆர்ப்பாட்டம் போர்ப்படை அதிகாரம் கொண்டவர்
அழிவார்கள் என்பதன்றி
அறிவார்கள் மத்தியில் வாழ்ந்திட இறைவனும்
அனுமதி அளிப்பதிலையே
காப்பாற்றும் நல்லவர் கண்ணியம் கொண்டவர்
காலமாய் ஆவதன்றி
கண்ணென மக்களால் போற்றவே படுகின்றார்
கடவுளின் அன்பராகி

0 மறுமொழிகள்: