Thursday, March 19, 2009

வாக்கை அளியும்

காந்தி வந்திருவார் மாமா நேரு வந்திருவார்
கண்ணியத்துக் காமராஜர் தானும் வந்திருவார்
ஏந்திழையார் அன்னை இந்தி ராவும் வந்திருவார்
இழநத இனிய தலைவர் ராஜீவ் காந்தி் வந்திருவார்
சேர்ந்து வந்திருவார் சுவ ரொட்டிகள் தோறும்
சிரித்த முகத்தில் வாக்கு கேட்க வந்து நின்றிடுவார்
ஆய்ந்து பாருங்கள் இவர்கள் அத்தனை பேரும்
அடுத்த தேர்தல் வந்தவுடன் மீண்டும் வந்திடுவார்


ஆய்ந்தறிந்த தந்தை பெரியாரும் வந்திடுவார்
அவரோடு அறிஞர் அண்ணா தானும் வந்திடுவார்
ஒய்ந்த ஏழைக்கான காரல் மார்க்சும் வந்திடுவார்
உத்தமராம் அம்பேத்கார் தானும் வந்திடுவார்
தேர்ந்த ஞானத் தேவர் மகன் தெய்வமாய் வருவார்
தீன் காயிதே மில்லத் தானும் வந்திடுவார்
பாந்தமாக இரு அணியும் இவர்கள் படம்
பத்திரமாய் அச்சடிக்கும் வாக்கை அளியும்

0 மறுமொழிகள்: