Friday, April 3, 2009

குறட் கருத்து அதிகாரம் இரவு 108ம் அதிகாரம்

இரந்து நிற்பார் ஈவாரே ஆவாராம் ஆம்
இனிய தந்தை வள்ளுவனார் சொல்லுகின்றார்
சிறந்து நிற்கும் இப்படியோர் சிந்தனையை
செப்புதற்கு அவரன்றி யார்தான் உண்டு
மறந்தும் தம் கனவினிலும் செல்வம் தன்னை
மறைக்காமல் வெளிப்படையாய் வாழ்வார் தம்மை
இரந்து அவர் உடன் கொடுக்கும் மாண்பதனை
எல்லோரும் உணரும் வாய்ப்பைக் கொடுக்கின்றாராம்


இரந்தவரே கொடுக்கின்றார் என்ற செய்தி
இதோ இந்தக் குறள் வழியே வருகின்றது

அதிகாரம் 108
இரவு
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

0 மறுமொழிகள்: