Wednesday, April 29, 2009

சேரும்

ஏழைகட்கு உணவளித்தல் அன்பு செய்தல்
என்பதற்கு ஒரு நாளைச் சொல்லி வைத்தார்
பேழைக்குத் தங்கம் வாங்குமென்று எந்தப்
பேடி சொன்னான் என்பதுவே தெரியவில்லை
வேலையற்ற வேலையாக கடனை வாங்கி
விரைகின்றார் தங்கம் வாங்கிச் சேர்ப்பதற்கு
நாளை வாழ்வு நிச்சயமா நினைத்தீரா நீர்
நாயகனின் அருள் இருந்தால் வந்தே சேரும்

2 மறுமொழிகள்:

said...

அக்‌ஷய திரிதியை அருமையாக அடித்து விளக்கினீர்கள் அய்யா..

சிறப்பு ..

வாழ்க தமிழுடன்,

தமிழ் நிலவன்.

http://eerththathil.blogspot.com

said...

நன்றாகவுள்ளது..