Wednesday, April 22, 2009

காயப் போகுது

சேலையெல்லாம் கொடிகளாகி தெருவெங்கும் பறக்குது
சேலைக்காக ஏங்கும் கூட்டம் தெருவோரம் கிடக்குது
நாளை வாழ்வு என்ன என்று தெரியாமல் தவிக்குது
நாடாள அலையும் கும்பல் வாக்குக் கேட்டு நெருக்குது
பேழைப் பணங்கள் வெளியில் வந்து பெரும் போடு போடுது
பிச்சைக்கார வேஷம் போட்டு பெரிசு எல்லாம் அலையுது
நாளை எல்லாம் முடிந்த பின்னர் நாடாளப் போகுது
நாட்டில் உள்ள ஏழைகளின் வயிறு காயப் போகுது

0 மறுமொழிகள்: