Friday, April 3, 2009

குறட் கருத்து அதிகாரம் 108 இரவு

இரந்து நிற்பார் அழகுடையர் ஆவதற்கு
ஏற்ற ஒரு வழியினை நம் தந்தை சொன்னார்
மறந்தும் கூட செல்வத்தை மறைத்து வைக்கும்
மனம் இல்லாப் பெருங் கடமை யாளரிடம்
இரந்து நிற்றல் மிகச் சிறந்த ஏற்றம் தரும்
இரப்பவர்க்கும் அது பெரிய அழகைத் தரும்
சிறந்து நிற்கும் அக் குறளை இங்கே காண்பாம்
சென்றிரந்து நின்றோமா? அவனாய்த் தந்தான்

அதிகாரம் 108
இரவு
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஒர் ஏஎர் உடைத்து

0 மறுமொழிகள்: